/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரியில் வெள்ளப்பெருக்கு விசைப்படகு இயக்கம் நிறுத்தம்
/
காவிரியில் வெள்ளப்பெருக்கு விசைப்படகு இயக்கம் நிறுத்தம்
காவிரியில் வெள்ளப்பெருக்கு விசைப்படகு இயக்கம் நிறுத்தம்
காவிரியில் வெள்ளப்பெருக்கு விசைப்படகு இயக்கம் நிறுத்தம்
ADDED : ஜூலை 31, 2024 07:45 AM
இடைப்பாடி: மேட்டூர் அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளப்-பெருக்கு ஏற்பட்டது.
இதனால் காவிரி கரை-யோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்-சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கால் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிபேட்டைக்கு இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராள-மான மக்கள், 6 கி.மீ., சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இரவில் கண்காணிப்புமேட்டூர் அணை உபரிநீர் திறப்பால், சங்ககிரி தாலுகாவில் உள்ள காவிரி ஆற்றின் கரை-யோர பகுதிகளான காவேரிப்பட்டி, அன்னாமா-ரப்பன் கோவில் பகுதிகளில் மக்கள் குடியி-ருப்பை ஒட்டி தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இதனால் தேவூர் பிர்காவில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் என, 8 பேரை இரவு நேர பணியில் அமர்த்தியுள்ளனர். அவர்கள் நேற்று வெள்ள அபாய அளவை கண்-காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.