/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
/
ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் யுவராஜ்.
அம்மாபேட்டையில் உள்ள நிதி நிறு- வனத்தில் மேலாளராக உள்ளார். சில நாட்க-ளுக்கு முன், அதே நிறுவனத்தில் ஊழியராக உள்ள, தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த குமாருடன், 12 லட்சம் ரூபாயை எடுத்துக்-கொண்டு, மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வங்-கியில் டிபாசிட் செய்ய பைக்கில் சென்றனர்.அப்போது ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி-விட்டு பணத்தை பறித்து சென்றது. அம்மா-பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, 5 பேரை கைது செய்தனர். மேலும் திருச்சியை சேர்ந்த சித்திக், 30, என்பவரை தேடினர். இந்நிலையில் நேற்று, சேலம் ஜே.எம்.எண்: 5ல் சித்திக் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.