/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்., முன்னிலையில் 1,500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
இ.பி.எஸ்., முன்னிலையில் 1,500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
இ.பி.எஸ்., முன்னிலையில் 1,500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
இ.பி.எஸ்., முன்னிலையில் 1,500 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 19, 2025 01:26 AM
அயோத்தியாப்பட்டணம் :அயோத்தியாப்பட்டணம் அடுத்த வலசையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தி.மு.க., வி.சி., கொங்கு பேரவை உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து விலகிய, 1,500 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, வடக்கு ஒன்றிய செயலர் மணி ஏற்பாட்டில் நடந்தது. அதில் அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., முன்னிலையில், முன்னாள் கவுன்சிலர் அருண்குமார், ராஜா, சிலம்பரசன், சரவணன் உள்ளிட்ட அனைவரும், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, சால்வை அணிவித்து, உறுப்பினர் கார்டு வழங்கி, இ.பி.எஸ்., வரவேற்றார்.
தொடர்ந்து இ.பி.எஸ்., பேசுகையில், ''வரும், 2026 தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், விவசாயிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். நிலம் இல்லாதவர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டித்தரப்படும். மேலும் தற்போது மகளிர் உரிமை தொகை வழங்கப்படுபவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும், அ.தி.மு.க., ஆட்சியில், 1,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்,'' என்றார்.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ., சித்ரா, அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலர் ராஜசேகரன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலர் குணசேகரன், இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் ராஜராஜசோழன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலர் அருண்குமார், பேரூர் செயலர் ரவிசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.