ADDED : மே 26, 2025 05:32 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரி அடிக்கரையில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. அங்கு தென்னந்தோப்புகள் உள்ளன. அடிக்கரையில் சுற்றித்திரியும் ஏராளமான குரங்குகள், தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலால், இளநீரை பருகி தாகத்தை தணித்துக்கொள்கின்றன.
இதுகுறித்து காமராஜனார் உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, 65, கூறியதாவது:குரங்குகள், தென்னை மரத்தில் ஏறி, இளநீராக முற்றும் முன், குரும்பை பறிக்கின்றன. மேற்பகுதியில் கடித்து துளை ஏற்படுத்தி, தண்ணீரை குடிக்கின்றன. துளையை பெரிதாக்கி, கையை விட்டு, வழுக்கை நிலையில் உள்ள தேங்காயை எடுத்தும் சாப்பிடுகின்-றன. இளநீரை குடித்த பின், காலி தென்னை குரும்பையை துாக்கி வீசுகின்றன. மரத்தில் பதுங்கும் குரங்குகளை விரட்ட முடி-யவில்லை. மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இங்குள்ள குரங்குகளை பிடித்துச்செல்ல, வனத்து-றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.