sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்ஸ்பெக்டர் விசாரணை வேண்டாம் வேறு அதிகாரி நியமிக்க பெற்றோர் மனு

/

இன்ஸ்பெக்டர் விசாரணை வேண்டாம் வேறு அதிகாரி நியமிக்க பெற்றோர் மனு

இன்ஸ்பெக்டர் விசாரணை வேண்டாம் வேறு அதிகாரி நியமிக்க பெற்றோர் மனு

இன்ஸ்பெக்டர் விசாரணை வேண்டாம் வேறு அதிகாரி நியமிக்க பெற்றோர் மனு


ADDED : ஜூன் 08, 2024 02:19 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: துணை தாசில்தார் மர்மசாவு குறித்து, பெண் இன்ஸ்பெக்டர் நடத்திய விசாரணை திருப்தி இல்லாததால், வேறு அதிகாரி விசாரணை நடத்த வேண்டி பெற்றோர் மனு கொடுத்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக வேலை செய்தவர் நர்மதா, 37. நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்ட சபரி, 38, இவரது கணவர். இவரும் அதே அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளாக பணிபுரிந்தார். கடந்த மார்ச், 28 அதிகாலை நர்மதா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நர்மதா பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால், மேட்டூர் தாசில்தார் விஜி மன உளைச்சல் ஏற்படும் வகையில் நர்மதாவிடம் பேசியுள்ளார்.

நர்மதா தற்கொலைக்கு தாசில்தாரே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த மாதம் நர்மதா தாய் வெண்ணிலா, மணிகண்டசபரி ஆகியோர் அளித்த புகார்படி, சேலம் டி.ஆர்.ஓ., மேனகா விசாரணை நடத்தினார். இந்நிலையில் கடந்த, 31ல் மேட்டூர் இன்ஸ்பெக்டர் அழகுராணி, சம்பவம் தொடர்பாக நர்மதா கணவர் மணிகண்டசபரி, அவரது வீட்டில் வேலை செய்த பெண் பொன்னி இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், நேற்று நர்மதா பெற்றோர் செல்லமுத்து, வெண்ணிலா ஆகியோர், மேட்டூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மகள் இறப்பு சான்றிதழ் பெறுவது உள்பட, பிற காரணங்களுக்காக எனது மருமகன் மணிகண்டசபரி மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு முதல் தகவல் அறிக்கையில் எனது மகள், மருமகன் இடையே தகராறு ஏற்பட்டதால்தான், நர்மதா தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளனர். எனது மகள், மருமகன் மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்தினர்.

என் மகளை தாசில்தார் விஜிதான் தற்கொலைக்கு துாண்டியுள்ளார். அதற்கு சப்-

கலெக்டர் நேர்முக உதவியாளர் புரு ேஷாத்தமன் உடந்தையாக இருந்துள்ளார். இந்த வழக்கில் அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். விசாரணை அதிகாரியாக உள்ள மேட்டூர் இன்ஸ்பெக்டர் அழகுராணிக்கு பதிலாக, வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us