ADDED : ஜூன் 13, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: பாகனேரியில் மனோன்யா புத்தா அறக்கட்டளை சார்பில் ஓ.ஆர்.இ.எம்., அரசு மேல்நிலை பள்ளி, அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, ஆர்.சி., நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக 7,000 நோட்டுக்கள் வழங்கப்பட்டது.
அரசு மகளிர் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை பவுன் ரோஜா, பிற பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் மாணவர்களுக்கு இலவச நோட்டுக்களை வழங்கினார்.
டிரஸ்டி காந்திநாதன், சுப்பிரமணியன், முத்துகருப்பன் பங்கேற்றனர்.