/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களுக்கு சீருடை பற்றாக்குறை
/
மாணவர்களுக்கு சீருடை பற்றாக்குறை
ADDED : செப் 19, 2025 02:09 AM
சிவகங்கை,: சிவகங்கையில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை பற்றாக்குறையாக இருப்பதால் பள்ளி துவங்கி 3 மாதங்களை கடந்தும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சீருடை வினியோகம் செய்யவில்லை.
தமிழக அரசு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமூக நலத்துறை மூலம் துணி கொள்முதல் செய்யப்பட்டு சீருடை தைக்கப்பட்டு பள்ளி கல்வித்துறையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு சீருடை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி திறந்து 3 மாதத்தை கடந்தும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும் இதுநாள் வரை சீருடை வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கூறுகையில், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் தற்போது தான் சேர்ந்திருப்பதால் அவர்களுக்கான அளவு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் சீருடை வழங்கப்படும் என்றனர்.