ADDED : ஜூன் 07, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே மொன்னியைச் சேர்ந்தவர் நாகராஜ் 65., என்ற ராசு. இவர் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் எதிரே பரோட்டா கடை நடத்தி வருகிறார்.
கடன் அதிகமாக இருந்ததால் சில தினங்களாக கவலையுடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு செல்லாமல் கடையிலேயே இருந்துள்ளார்.
கடை பணியாளர்கள் நேற்று காலை கடைக்கு வந்து ஷட்டரை திறந்த போது நாகராஜ் துாக்கிட்டு இறந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.