sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளர் மீது வழக்கு

/

ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளர் மீது வழக்கு

ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளர் மீது வழக்கு

ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளர் மீது வழக்கு


ADDED : ஜூன் 13, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளம் கனரா வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் ரூ.9.57 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கொல்லபத்துல்லா சுனில் ராஜூ 45, மீது வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெரியகுளம் கனரா வங்கி ஓராண்டிற்கு மேல் மேலாளராக இருந்தவர் கொல்லபத்துல்லா சுனில் ராஜூ. தற்போது பணி மாறுதலில் சென்றார். இவர் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி கடன் தவணைத் தொகைகளை பெற்றுக்கொண்டு, அவர்களது கணக்கில் வரவு வைக்காதது தெரிந்தது. இது குறித்து வங்கி முதன்மை மேலாளர் கவிதா 45, கணக்குகளை ஆய்வு செய்தார். இதில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.9.57 லட்சத்தை, மேலாளர் கையாடல் செய்ததை கண்டறிந்தார். முதன்மை மேலாளர் புகாரில் வடகரை இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us
      Arattai