sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

/

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை


ADDED : ஜூன் 13, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தேனி மாவட்டத்தில் வீட்டில் துாங்கிய 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆண்டிபட்டி தாலுகா கூலித்தொழிலாளி முனியாண்டிக்கு 26, இருபத்தைந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆண்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான தம்பதியின் 6 வயது மகள் அப்பகுதி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். 2023 அக்., 12ல் ஆறு வயது மகளை வீட்டில் துாங்க வைத்து விட்டு இரவு பணிக்கு செல்லும் மனைவியை பஸ் ஏற்றி விட கணவர் சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்த தந்தையிடம் சிறுமி ' முனியாண்டி தன்னை பலாத்காரம் செய்ததாக அழுதபடி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். முனியாண்டியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். பின் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் உதவி வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார்.

முனியாண்டிக்கு அத்துமீறி வீட்டில் நுழைந்ததற்காக 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 25 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.6 லட்சம் வழங்கவும், அதில் இடைக்கால இழப்பீடாக ரூ.ஒரு லட்சம், கல்வி, மருத்துவ உதவிக்காக ரூ.50 ஆயிரம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீத தொகையை சிறுமி பெயரில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us