/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாய நிலத்தில் ஆண் சடலம் மீட்பு
/
விவசாய நிலத்தில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 20, 2024 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் ஊராட்சி பங்களா தோட்டம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி மற்றும் கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்று, சடலத்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் பெயர், விலாசம் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.