/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரியின் கலங்கல் சேதம்: சீரமைக்க எதிர்பார்ப்பு
/
ஏரியின் கலங்கல் சேதம்: சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 23, 2025 02:53 AM

பொன்னேரி:ஏரியின் கலங்கல் சேதமடைந்து கிடப்பதால், மழைநீர் சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த விடதண்டலம் கிராமத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 250 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி உள்ளது.
மழைக்காலங்களில் ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீர் விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட ஏரியின் கலங்கல் பகுதி சேதமடைந்து, ஆங்காங்கே ஓட்டைகளுடன் ஏற்பட்டுள்ளது.
இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் தண்ணீர், கலங்களின் உடைப்புகள் வழியாக வெளியேறி வீணாகி விடுகிறது.
ஆண்டு முழுதும் ஏரியில் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதுடன், பாசனமும் பாதித்து, நிலத்தடி நீர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
நீர்வளத்துறையினரிடம் விவசாயிகள் பலமுறை தெரிவித்தும், ஏரியின் கலங்கல் சீரமைக்கப்படாமல் உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கு முன், ஏரியின் கலங்கலை புதுப்பிக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.