sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : செப் 16, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சூர்;திருப்பாச்சூர் பகுதியில் சேதமடைந்த 400 மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் வழியாக கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே, திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து திருப்பாச்சூர், கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில், திருத்தணி செல்லும் சாலை சந்திப்பில் இருந்து திருப்பாச்சூர் செல்லும் சாலை வரை, 400 மீட்டர் சாலை சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளது.

இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அருகிலேயே மாவட்ட கலெக்டர் அலுவலகம் இருந்தும், சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்று ம் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us