sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி

/

லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி

லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி

லாரி நிறுத்த வளாகத்தில் கழிவுநீர் தேக்கத்தால் அவதி


ADDED : செப் 16, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 16, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்;மாதவரம் சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்தில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால், லாரி ஓட்டுநர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்தில், தினமும் 800க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இங்கு, ஓட்டுநர்கள் தங்குமிடமும் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.

மேலும், புழல் சிறையிலிருந்து கால்வாய் வழியே வெளியேறும் கழிவுநீரும், இந்த லாரிகள் நிறுத்த வளாகம் வழியாகவே செல்கிறது. அந்த கால்வாயில் கசிந்து வெளியேறும் கழிவுநீரும், ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், லாரியில் இருந்து கீழே இறங்க கூட முடியாமல், ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியும் அதிகமாகியுள்ளதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது. இதன் அருகே, மாதவரம் மண்டல அலுவலகம் செயல்பட்டு வந்தும், அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us