/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
/
திருவாலங்காடில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
திருவாலங்காடில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
திருவாலங்காடில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : செப் 28, 2025 01:40 AM

திருவாலங்காடு:நெடுஞ்சாலையோரம் தேங்கியுள்ள கழிவுநீரால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திருவாலங்காடு மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் ---- அரக்கோணம் நெடுஞ்சாலையில் திருவாலங்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில், சர்க்கரை ஆலை முதல் தேரடி வரை, 500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் அமைந்துள்ளன.
இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல, நெடுஞ்சாலையை ஒட்டி கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது. இக்கால்வாய் பல இடங்களில் தூர்ந்து, கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
தற்போது, தேரடி அருகே இரண்டு இடங்களில் கழிவுநீர் குட்டை போல தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
குட்டை போல கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகி றது. இரவில் கொசுக்கள் கடிப்பதால் கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கழிவுநீரில் பிளீச்சிங் பவுடர் கூட துவுவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினார்.

