/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
காதலியிடம் அத்துமீறல் காதலனுக்கு 'காப்பு'
/
காதலியிடம் அத்துமீறல் காதலனுக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 21, 2025 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்:இளம்பெண்ணை காதலித்து, பாலியல் ரீதியாக அத்துமீறிய காதலன் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் அருகே, வாஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன், 30. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணிடம் பழகியுள்ளார். இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
மே மாதம் இளம்பெண்ணிடம், தினகரன் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் இளம்பெண் கேட்டுள்ளார். மறுத்த காதலன், அவரை மிரட்டியுள்ளார். நேற்று முன்தினம் போலீசில் இளம்பெண் புகார் செய்தார். திருவாரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, தினகரனை கைது செய்தனர்.