/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கல்லால் தாக்கி மனைவியை கொன்ற கணவருக்கு வலை
/
கல்லால் தாக்கி மனைவியை கொன்ற கணவருக்கு வலை
ADDED : மே 30, 2025 01:05 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ஜெயபால் மனைவி பூவதி, 45. கணவரை பிரிந்த இவர், ஆறுமுகநேரி, செல்வராஜபுரத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி வெங்கடேசனை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பூவதி கண்டித்துள்ளார். சில மாதங்களுக்கு முன், குலசேகரன்பட்டினம் அரசு மாணவியர் விடுதி தெருவில் வீடு எடுத்து இருவரும் வசித்தனர். நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த வெங்கடேசன், கல்லால் பூவதி தலையிலும், முகத்திலும் தாக்கிவிட்டு தப்பினார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்துார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பூவதி உயிரிழந்தார். குலசேகரன்பட்டினம் போலீசார், வெங்கடேசனை தேடி வருகின்றனர்.