sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கனிமொழி, கீதா ஜீவன் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

/

கனிமொழி, கீதா ஜீவன் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

கனிமொழி, கீதா ஜீவன் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

கனிமொழி, கீதா ஜீவன் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்


ADDED : ஜூன் 29, 2025 02:06 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி, குறிஞ்சிநகரில் உள்ள கனிமொழி எம்.பி., மற்றும் போல்பேட்டையில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் கூறினார்.

இருவரது வீடுகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அது வெறும் புரளி என, தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தவர், துாத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மாரியப்பன், 58, என தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான அவரிடம், வடபாகம் போலீசார் நேற்று விசாரித்தனர்.

அவரது மகள், ஓராண்டுக்கு முன் ஒருவருடன் சென்றது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீசார் விசாரிக்க வராத ஆத்திரத்தில், தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார். மன உளைச்சலில் இருந்த மாரியப்பனை, 'இனிமேல் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது' என, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us