/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
739 கிலோ கஞ்சா எரியூட்டி அழிப்பு
/
739 கிலோ கஞ்சா எரியூட்டி அழிப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும்வகையில், கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், நேற்று, போலீசார் 395 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து, 738.82 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக காவல்துறை துணை தலைவர் சசிமோகன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., கிரிஷ்யாதவ் உள்பட அதிகாரிகள் முன்னிலையில், ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்திலுள்ள கோவை பயோ வேஸ்ட் நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா, எரியூட்டப்பட்டு, அழிக்கப்பட்டது.