/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பினர் தகராறு வாலிபர் கைது..
/
இரு தரப்பினர் தகராறு வாலிபர் கைது..
ADDED : ஜூன் 23, 2024 05:39 AM
விழுப்புரம்: காணை அருகே இரு தரப்பு தகராறில் ஆறு பேர் மீது வழக்குப் பதிந்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
காணை அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 50; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சேட்டு, 50; தனசேகருக்கு சொந்தமான 4 சென்ட் வீட்டு மனையில், நேற்று முன்தினம் சேட்டு, அவரது மகன்கள் சண்முகம், 22; தாமோதரன், 23; மற்றும் 16 வயது மகன் ஒருவர் உட்பட 4 பேரும் குப்பை தொட்டி வைத்துள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட தனசேகர் மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள், 45; ஆகியோரை சேட்டு உட்பட நால்வரும் சேர்ந்து தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் சேட்டு, தனசேகர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்தனர்.