/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
/
இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 13, 2024 12:06 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பக்கத்து வீட்டு மரத்தின் இலைகள் விழுந்தால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 53; டைலர்.
கடந்த 9ம் தேதி, இவரது வீட்டில் உள்ள மரத்திலிருந்து, காய்ந்த இலைகள், காற்றில் பறந்து பக்கத்து வீட்டில் விழுந்துள்ளது. அடிக்கடி இலைகள் விழுந்ததால், ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த அன்பழகன், 50; பிளேமினால், முனியம்மாள் ஆகியோர், கலியபெருமாளை திட்டியதோடு, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.