sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் திண்டிவனம் எம்.எல்.ஏ., கோரிக்கை

/

பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் திண்டிவனம் எம்.எல்.ஏ., கோரிக்கை

பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் திண்டிவனம் எம்.எல்.ஏ., கோரிக்கை

பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் திண்டிவனம் எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஜூலை 29, 2024 06:29 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், : திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டத்தில் நிலுவையிலுள்ள நிதியை வழங்க வேண்டும் என்று, நகராட்சி நிர்வாக துறை முதன்மை செயலாளரிடம், அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,கோரிக்கை வைத்துள்ளார்.

திண்டிவனம் நகராட்சியில், ரூ.265 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகை ரூ.60 கோடியை நகராட்சி சார்பில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கவில்லை. இதனால் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது .

இதை தொடர்ந்து திண்டிவனம் எம்.எல்.ஏ.,சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆகியோரை திண்டிவனம் எம்.எல்.ஏ.,அர்ஜூனன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும், திண்டிவனம் ஜாய்ஸ் பொன்னையா தெருவில் பாலம் அமைக்க வேண்டும், வடவாம் பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் 10 எம்.எல்.டி., தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கு குப்பைகளை சேகரிக்க போதிய இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், ஒரு வாரத்திற்குள் நிலுவையிலுள்ள அனைத்து தொகைகளை விடுவிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us