ADDED : ஜூலை 29, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் புகையிலை விற்ற வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார், நேற்று வி.மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு, அரசால் தடை செய்த புகையிலை விற்ற இந்திரா நகரை சேர்ந்த அலமேலு,42; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அதே போல், டவுன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், நேற்று ரயில் நிலையத்தில் ரோந்து சென்ற போது, புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த திருமலை மகன் நரேந்திரன்,24; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.