ADDED : மே 24, 2025 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்த விவசாயி இறந்தார்.
திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் அயோத்தி, 49; விவசாயி. இவர் நேற்று முன்தினம் பாம்பூண்டியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு மதுபோதையில் தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.