ADDED : ஜூலை 18, 2024 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி,: தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில்சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை கோட்ட உதவி செயலாளர் சீதாராமன்தலைமை வகித்தார். சிவகாசி கிளை தலைவர்கணேஷ், செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்களின் புதிய பென்ஷன் திட்டம் என்னும் உத்தரவாதமற்ற மோசடி திட்டத்தை ஒழித்து ரயில்வே தொழிலாளர்களின் நலன் பயக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை பெறுவது குறித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.