ADDED : ஜூலை 11, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடந்தது.
கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிவகாசி சப் கலெக்டர் பிரியா பேசுகையில், தன்னம்பிக்கை கடின உழைப்பும் இருந்தால் மாணவர்கள் எதையும் சாதிக்கலாம் என்றார்.
வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.