/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோழிச் சண்டை மோதல் 11 பேர் மீது வழக்கு
/
கோழிச் சண்டை மோதல் 11 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி சம்பகுளத்தை சேர்ந்தவர்கள் நாகஜோதி 32, வேதவள்ளி 23.
இவர் பாத்திரம் கழுவியபோது, நாகஜோதி வளர்க்கும் கோழி பறந்து பாத்திரத்தில் விழுந்தது. ஆத்திரமடைந்து தகாத வார்த்தையில் பேசியதால், இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். வேதவள்ளி, பிரேமா, ராமுவேல், நாகசேகர், ராஜேஸ்வரி மீதும், நாகஜோதி, நந்தினி, முத்துராமன், அனுசியா, அபிநயா, இளங்கோ மீதும் வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.