sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஊராட்சி துணை தலைவர் வீடு முற்றுகை

/

ஊராட்சி துணை தலைவர் வீடு முற்றுகை

ஊராட்சி துணை தலைவர் வீடு முற்றுகை

ஊராட்சி துணை தலைவர் வீடு முற்றுகை


ADDED : ஜூலை 22, 2024 04:24 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்தரையர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக திருபுவனத்தில் இருந்து கட்டங்குடி, பாலையம்பட்டி வழியாக வைகை குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டை நகராட்சி மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

முத்தரையர் நகர் வழியாக செல்லும் பகுதியில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 2 குழாய்கள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகளாக அந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அருப்புக்கோட்டை நகராட்சி குடிநீர் கொண்டு செல்வதற்கு புதிய குழாய்கள் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை வழியாக அமைக்கப்பட்டதால் முத்தரையர் நகர் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தண்ணீர் வராததால் மக்கள் ஊராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வீட்டை நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேசி புதிய குழாய் அமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக துணைத் தலைவர் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us