எலக்ட்ரீசியன் பலி
விருதுநகர்: மதுரையைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ரமேஷ் 19. இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் ரெசிடென்சியில் வயரிங் வேலை செய்தார். அங்கு 4 வது தளத்தில் ஏ.சி.,க்கான வயர்களை பொருத்தும் பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி
தளவாய்புரம்: திருவாரூர் மாவட்டம் குளிக்கரை பகுதியை சேர்ந்தவர் லெனின் 37, வெல்டிங் தொழிலாளி. இவர் தளவாய்புரம் பகுதியில் செயல்படும் தனியார் ரைஸ் மில்லில் புகை போக்கி மழைநீர் தடுப்பு ஒப்பந்த பணிக்காக 20 அடி உயரத்தில் வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சிவகாசி: விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் கணேசன் 60. இவரது மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் பலி
சிவகாசி: நாரணாபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்திராஜ் 54. இவர் தனது டூவீலரில் நாரணாபுரம் ரோட்டில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்
சிவகாசி: கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அமுதவள்ளி மகள் வித்யா 25. கல்லுாரி மாணவியான இவர் வழக்கம் போல கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.--