sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோட்டில் கிடந்த மரக்கிளைகள் அகற்றம்

/

ரோட்டில் கிடந்த மரக்கிளைகள் அகற்றம்

ரோட்டில் கிடந்த மரக்கிளைகள் அகற்றம்

ரோட்டில் கிடந்த மரக்கிளைகள் அகற்றம்


ADDED : ஜூலை 18, 2024 04:35 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வெம்பக்கோட்டை ரோட்டில் கிடந்த மரக்கிளைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

டிரான்ஸ்பார்மர், மின் கம்பம் அருகிலுள்ள மரங்களால் காற்றடிக்கும் போதோ, மழை பெய்யும் போதோ வயர்களில் உராய்வு ஏற்பட்டு மின் தடை ஏற்படும். மேலும் வேறு அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மாவட்டத்தில் நகர் கிராமப் பகுதிகளில் மின்துறையினரால் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்த பராமரிப்பு பணியின் போது மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களின் மின் வயர்களில் சிக்கி இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி விடுவர். பெரும்பாலும் குடியிருப்புப் பகுதி, மெயின் ரோடுகளில் இவ்வாறு வெட்டப்படும் மரக்கிளைகள் அப்படியே போடப்பட்டு விடுகிறது. உடனடியாக அகற்றப்படுவது இல்லை.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது. இரவில் வருகின்ற வாகனங்களுக்கு ரோட்டில் கிடக்கும் மரக்கிளைகள் தெரியாததால் விபத்தில் சிக்குகின்றது. மேலும் தொடர்ந்து அதே இடத்தில் இந்த கழிவுகள் கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்களின் இருப்பிடமாகவும் மாற்றிக் கொள்கிறது.

சிவகாசி வெம்பக்கோட்டை ரோட்டில் இதேபோல் மின் துறையினரால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் ரோட்டிலேயே போடப்பட்டது.எனவே ரோட்டில் போடப்படும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக கிடந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us