sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம்; விபத்து காலங்களில் மீட்பு பணி தாமதம்

/

பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம்; விபத்து காலங்களில் மீட்பு பணி தாமதம்

பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம்; விபத்து காலங்களில் மீட்பு பணி தாமதம்

பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம்; விபத்து காலங்களில் மீட்பு பணி தாமதம்


ADDED : ஜூன் 27, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் விபத்து காலங்களில் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது. ஆலை உரிமையாளர்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் சிவகாசி,விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் 1080 பட்டாசுஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவைநகருக்கு வெளியே காட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளன.

சிவகாசி பகுதியில் நாரணாபுரம், அனுப்பன்குளம், மாரனேரி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளுக்கு செல்ல முறையான ரோடு வசதி இல்லை. புதர்களுக்கு இடையே சிறிய மண் பாதை மட்டுமே உள்ளது.

சிறிய மழை பெய்தாலும் தொழிலாளர்களை ஏற்றி வரும் பட்டாசு ஆலை வாகனமேசெல்ல முடியாது. பாதை முழுவதும் சகதியாக மாறிவிடுகிறது. பட்டாசு ஆலைகளில் எப்போதாவது எதிர்பாராமல் துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டால் அதுபோன்ற நேரங்களில் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படுகின்றது.

கடந்த காலங்களில் சில பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட போது மழை பெய்து பாதை சகதியாக மாறியதால் உடனடியாக மீட்புப் பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல பாதை வசதி இல்லாமல் மீட்பு பணி மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டது. இதனால் உயிர் இழப்புகளை தடுக்க முடியவில்லை.

எனவே காட்டுக்குள் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்றார்போல ரோடு வசதியை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அமைக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us