sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்

/

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்


ADDED : செப் 16, 2025 03:57 AM

Google News

ADDED : செப் 16, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனந்தவல்லி அம்மன் நவராத்திரி திருவிழா செப். 23ல் துவங்கி அக். 2 வரை நடக்கிறது.

செப். 23 காலை 5:00 மணிக்கு மேல் ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டுதலும், மாலை 6:00 மணிக்கு கொலு பூஜை நடக்கிறது. இதையடுத்து செப். 30 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு கொலு பஜனை நடக்கிறது.

அக். 1 இரவு 7:00 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 2 அன்று விஜயதசமி வழிபாடும், ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

நவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு வழக்கம் போல் தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us