/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்
/
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழா செப்.23ல் துவக்கம்
ADDED : செப் 16, 2025 03:57 AM
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனந்தவல்லி அம்மன் நவராத்திரி திருவிழா செப். 23ல் துவங்கி அக். 2 வரை நடக்கிறது.
செப். 23 காலை 5:00 மணிக்கு மேல் ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டுதலும், மாலை 6:00 மணிக்கு கொலு பூஜை நடக்கிறது. இதையடுத்து செப். 30 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு கொலு பஜனை நடக்கிறது.
அக். 1 இரவு 7:00 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 2 அன்று விஜயதசமி வழிபாடும், ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.
நவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு வழக்கம் போல் தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

