sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு

/

5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு

5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு

5 மாதங்களில் டெங்குவால் 7,500 பேர் பாதிப்பு

2


ADDED : ஜூன் 03, 2025 03:42 AM

Google News

2

ADDED : ஜூன் 03, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில், 7,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர்; நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர்.

தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் டெங்கு, இன்ப்ளூயன்ஸா, கொரோனா பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இவற்றால், தினமும் 100 பேர் வரை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், 'ஏடிஸ் - ஏஜிப்டி' வகை கொசுக்களால் பரவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் மட்டும், தினமும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

இதில், நோய் பாதிப்பு குறித்து அறியாமல், தீவிர நிலையில் மருத்துவமனைக்கு வந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 'ஒசல்டாமிவிர்' தடுப்பு மருந்து போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதால், காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஓரிரு நாட்களுக்கு பின் இருந்தால், தாமதிக்காமல் டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.

மேலும், வீடுகள், சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தியாகத படி துாய்மை பணியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே பாதிப்பை ஓரளவுக்கு தடுக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us
      Arattai