sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிக கட்டணம் கேட்கும் வங்கிகள் சிறு தொழில் நிறுவனங்கள் சிரமம்

/

அதிக கட்டணம் கேட்கும் வங்கிகள் சிறு தொழில் நிறுவனங்கள் சிரமம்

அதிக கட்டணம் கேட்கும் வங்கிகள் சிறு தொழில் நிறுவனங்கள் சிரமம்

அதிக கட்டணம் கேட்கும் வங்கிகள் சிறு தொழில் நிறுவனங்கள் சிரமம்


ADDED : செப் 13, 2025 02:13 AM

Google News

ADDED : செப் 13, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வங்கிகளில் வாங்கிய கடனை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் நடைமுறையாலும், கடனை வேறு வங்கிக்கு மாற்றும் போதும், முன்கூட்டியே அடைக்கும் போதும், அதிக கட்டணத்தை தனியார் வங்கிகள் வசூலிப்பதால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:

பல தொழில் நிறுவனங்கள், பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளில் கடன் வாங்குகின்றன. இந்தக் கடனை முன்கூட்டியே அடைக்கும் போதும், தனியார் வங்கியில் வாங்கிய கடனை, வேறு வங்கிக்கு மாற்றும் போதும், 'பிரிகுளோசர், டேக் ஓவர் சார்ஜ்' கட்டணமாக, மொத்த கடன் தொகையில், 4 சதவீதம் வசூலிக்கின்றன; இது, மிகவும் அதிகம்.

மேலும், ஆண்டுதோறும் வங்கி கடனை புதுப்பிக்குமாறு கூறி, அதற்கு மொத்த கடனில், 0.50 சதவீதம் கட்டணம் வசூலிக்கின்றன. இதற்காக, சொத்து பதிவு செய்வதற்கு, பதிவு துறைக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இது, பல்வேறு செலவுகளால் சிரமப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, கூடுதல் சிரமத்தை உருவாக்குகிறது. ஆண்டுதோறும் புதுப்பித்தல், பதிவு துறையில் கடன், அடமானம் பதிவு செய்வது போன்ற நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும், முன்கூட்டியே கடனை அடைக்க, அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us