அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்பா? சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணை
அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்பா? சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 11, 2024 04:16 AM

கரூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் தொடர்பு உள்ளதா என, யூடியூபர் சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கரூரை சேர்ந்த, பிரியாணி கடை அதிபர் கிருஷ்ணன் என்பவ-ரிடம், பண மோசடி செய்ததாக, கைது செய்யப்பட்ட விக்னேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கரூர் டவுன் போலீசார் யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்-தனர். சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்-பட்டுள்ள சவுக்கு சங்கரை கடந்த, 8 ல் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் கரூர் நீதி மன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்ப்படுத்தி, நான்கு நாள் காவலில் விசாரிக்க, கரூர் டவுன் போலீசார் அழைத்து சென்றனர். தற்போது, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் யூ டியூபர் சவுக்கு சங்-கரிடம், கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் தொடர்பு உள்-ளதா என, போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியா-னது.
இது பற்றி போலீசார் கூறியதாவது: கடந்தாண்டு மே மாதம், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது ஆதர-வாளர்களின் வீடுகளில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதுகுறித்து, சவுக்கு சங்கர் யூ டியூப் சேனலில் பேசியிருந்தார்.
மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், மனைவி நிர்மலா பெயரில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ராம் நகரில் கட்டி வரும், புதிய வீட்டின் முன், சவுக்கு சங்கர் நின்று செல்பி எடுத்து, சமூக வலை தளங்-களில் பதிவிட்டு இருந்தார். அந்த புதிய வீடு வைரல் ஆனது.
இதுபோன்ற சம்பவங்களுக்கு, கரூரை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வா-கிகள் யாராவது உதவி செய்தார்களா எனவும், தி.மு.க.,வினர் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பேட்டிகள், விக்னேஷின் பண மோசடி வழக்கு குறித்தும் விசாரித்தனர். விசாரணை தொடரும். இவ்வாறு கூறினர்.