ADDED : ஜன 26, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊக்கம் அளிக்கும்
''பல ஆண்டுகளாக இயற்கையான முறையில், பல பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். சாகுபடி செய்த பாரம்பரிய நெல் ரக அரிசியை சந்தைப்படுத்தும் முயற்சியிலும், சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நம்மாழ்வார் விருது எனக்கு முதன்முறையாக தமிழக அரசு அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தஞ்சாவூரை சேர்ந்த நான் முதல் முதலாக விருதை பெறுவது பெருமையாக இருக்கிறது. இந்த விருது என்னை போன்று இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் பலருக்கும் ஊக்கமாக அமையும்.
- சித்தர்,
இயற்கை விவசாயி,
மகர்நோன்புச்சாவடி,
தஞ்சாவூர்.

