sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டு மின் கட்டணம் உயராது; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

/

வீட்டு மின் கட்டணம் உயராது; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

வீட்டு மின் கட்டணம் உயராது; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

வீட்டு மின் கட்டணம் உயராது; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு


UPDATED : மே 20, 2025 02:35 PM

ADDED : மே 20, 2025 02:30 PM

Google News

UPDATED : மே 20, 2025 02:35 PM ADDED : மே 20, 2025 02:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ' தமிழகத்தில் வீட்டு மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இருக்கக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,'' என தமிழக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜூலை முதல் மின்சார கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை வாரியம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போது மின் கட்டண உயர்வு குறித்து எவ்விதஉத்தரவும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான உத்தரவு வழங்கினால், அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது. தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் சிவசங்கர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai