sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாமதமாகும் மானியத்தால் தவிக்கும் உள்ளாட்சிகள்

/

தாமதமாகும் மானியத்தால் தவிக்கும் உள்ளாட்சிகள்

தாமதமாகும் மானியத்தால் தவிக்கும் உள்ளாட்சிகள்

தாமதமாகும் மானியத்தால் தவிக்கும் உள்ளாட்சிகள்


ADDED : ஜூன் 15, 2025 12:41 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:தாமதமாகும் மாநில நிதிக்குழு மானியத்தால், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சம்பளம், பொதுச்செலவினங்களுக்கு வழி தெரியாமல் தவிக்கின்றன.

தமிழகத்தில், 38 மாவட்டங்களில், 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. அத்துடன், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 38 மாவட்ட ஊராட்சி அமைப்புகளும் உள்ளன. இந்த அமைப்புகளுக்கான செலவு நிதி மாதந்தோறும் மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து வழங்கப்படுகிறது.

இந்த நிதியில் தான், தெருவிளக்கு அமைத்தல், குடிநீர் இணைப்பு, துாய்மைப் பணி போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது.

கடந்த மே மாதம் வழங்க வேண்டிய செலவு நிதியை இதுவரை வழங்காததால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட பல்வேறு செலவினங்களையும் மேற்கொள்ள முடியாமல், உள்ளாட்சி அமைப்புகள் தள்ளாடுகின்றன.

கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை, 3,000த்துக்கும் மேற்பட்டவை வசதியானவை. மீதியுள்ளவை ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கவே போராடுகின்றன.

இந்நிலையில், நிதி தாமதமானதால் ஊராட்சிகளில் பணிபுரியும் செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், துாய்மை காவலர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ், பொதுச்செயலர் ரவி, பொருளாளர் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன் கூறுகையில், 'மாதந்தோறும், 2ம் தேதிக்குள் நிதி விடுவிக்கப்பட்டு வந்தது.

இம்மாதம், 14 நாட்களை கடந்தும் நிதி வராததால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஊராட்சி பணிகளிலும் தொய்வு ஏற்படும். எனவே, உடனே நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us