sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு

/

ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு

ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு

ரேஷன் குறைதீர் கூட்டம் 121 மனுக்கள் மீது தீர்வு


ADDED : ஜூன் 15, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும், நேற்று நடந்த பொது விநியோக குறைதீர் கூட்டத்தில் 121 மனுக்கள் மீது உடனயாக தீர்வு காணப்பட்டது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஜூன் மாதத்திற்கான பொதுவிநியோக குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் மேல்ஒட்டிவாக்கம் கிராமம், உத்திரமேரூரில் சாலவாக்கம், வாலாஜாபாதில் ஊத்துக்காடு, ஸ்ரீபெரும்புதுாரில் காரந்தாங்கல், குன்றத்துாரில் செரப்பனஞ்சேரி என, ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது.

இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் உள்ள ஐந்து தாலுகாவிலும், மொத்தம் 166 மனுக்கள் வரப்பெற்றன.

இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 121 மனுக்களுக்கு குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 45 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us