sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யார் யாருக்கு கமிஷன் தரப்படுகிறது: உண்மையை உடைக்கிறார் திமுக எம்எல்ஏ

/

யார் யாருக்கு கமிஷன் தரப்படுகிறது: உண்மையை உடைக்கிறார் திமுக எம்எல்ஏ

யார் யாருக்கு கமிஷன் தரப்படுகிறது: உண்மையை உடைக்கிறார் திமுக எம்எல்ஏ

யார் யாருக்கு கமிஷன் தரப்படுகிறது: உண்மையை உடைக்கிறார் திமுக எம்எல்ஏ


ADDED : செப் 22, 2025 07:08 AM

Google News

ADDED : செப் 22, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம், திருவாரூரில் பேசும் போது, 'டெல்டா மாவட்டங்களில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபாய் கமிஷன் வாங்கறாங்க. இப்படி பல கோடி ரூபாய் கமிஷனா பிடுங்கப்படுது' என பேசினார்.

விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திருவாரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன், 'அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலித்தனர். இதில் முதல்வருக்கோ, தி.மு.க., அரசுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. 'இந்தத் தொகையை விவசாயிகளிடம் இருந்து பெறுவது, சுமை துாக்கும் தொழிலாளர்கள் தான். விவசாயிகள் தான் விருப்பப்பட்டுக் கொடுக்கின்றனர்.

விருப்பப்பட்டுக் கொடுத்தாலும், விவசாயிகளுக்கு பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் வழிகளை அரசு யோசித்து வருகிறது' என்று தெரிவித்தார். இது, சுமை துாக்கும் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:

மூட்டையை எடுத்து செல்லும் லாரி டிரைவர்களுக்கு மாமூல்; ஆய்வுக்கு வரும் அரசு அதிகாரிகளுக்கு மாமூல், நெல் எடையிழப்பு ஏற்படாமல் சமாளிக்க மாமூல் என, நெல்லை விற்க வரும் விவசாயிகளிடம் லஞ்சமாக வாங்குகின்றனர். நெல்லை கொள்முதல் செய்யும் பணியாளர்கள், நேரடியாக அந்த பணத்தை விவசாயிகளிடம் வாங்கினால், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், சுமை துாக்கும் தொழிலாளர்களை, கருவியாக பயன்படுத்துகின்றனர்.

நெல் கொள்முதல் செய்யும் அலுவலர் முதல், நெல்லை குடோனுக்கு கொண்டு செல்வது வரை, அதிகாரிகள் பலருக்கும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.


இந்த லஞ்சத்தை சுமை துாக்கும் தொழிலாளர்கள் வாயிலாக அலுவலர்கள் வாங்குவதால், விவசாயிகள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த உண்மை புரியாமல், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், சுமை துாக்கும் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us