sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை: நடத்தியது ஜப்பான் ராணுவம்

/

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை: நடத்தியது ஜப்பான் ராணுவம்

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை: நடத்தியது ஜப்பான் ராணுவம்

முதல் முறையாக உள்நாட்டில் ஏவுகணை சோதனை: நடத்தியது ஜப்பான் ராணுவம்


ADDED : ஜூன் 24, 2025 04:49 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 04:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பான் ராணுவம், முதல் முறையாக இன்று உள் நாட்டில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்ற ஜப்பான், வெற்றி பெற்ற நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக நீண்டகாலமாக ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை.

இந்நிலையில் அண்டை நாடுகளான சீனா மற்றும் வடகொரியாவுடன் அவ்வப்போது ஜப்பானுக்கு சிறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதை கருத்தில் கொண்டு ஜப்பான் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.

ஜப்பான், 2027க்குள் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் வடக்கு பிரதான தீவான ஹொக்கைடோவில் உள்ள ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில், தரையிலிருந்து கப்பல் இலக்குகளைத் தாக்கும் குறுகிய தூர ஏவுகணையின் சோதனை இன்று நடத்தப்பட்டது.

வடகொரியா, சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தனது ராணுவக் கட்டமைப்பை துரிதப்படுத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் பாதுகாப்பு கூட்டாளிகளின் பிரதேசங்கள் உட்பட, வெளிநாடுகளில் ஜப்பான், ஏற்கனவே ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

சீனா மற்றும் வடகொரியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் ராணுவ நவீனமயமாக்கலில் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us
      Arattai