மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக
மனம் குவியும் இசை: கர்நாடக இசை - கோடிட்ட இடங்களை நிரப்புக
PUBLISHED ON : ஜூன் 30, 2025

1. 15 ஆம் நூற்றாண்டின் இடையில் ----------- ஆட்சியிலேயே கர்நாடக சங்கீதம் தென்னிந்தியாவில் அதிக வளர்ச்சி கண்டது.
2. ----------- ராகங்களே கர்நாடக சங்கீதத்தின் இலக்கணமாக இன்றளவும் திகழுகின்றன.
3. 16 ஆம் நூற்றாண்டில் விஜயராகவ நாயக்க மன்னரின் அவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் -----------. இவர் கவிஞர், பாடகர், இசை ஆராய்ச்சியாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.
4. வெங்கடமகி மேளகர்த்தா ராகங்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் ----------- என்கிற மேளகர்த்தா இலக்கண நூலை எழுதி முடித்தார்.
5. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த நூல், கர்நாடக சங்கீதத்தின் ----------- தூண்களை விளக்கும் நூல் எனப் புகழ்பெற்றது.
விடைகள்:
1. விஜயநகரப் பேரரசு
2. மேளகர்த்தா
3. வெங்கடமகி
4. சதுர்தண்டிப் பிரகாஷிகா
5. நான்கு