
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். பூஜையறையில் விளக்கேற்றி நிறை குடத்தில் இருந்து செம்பில் தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மஞ்சளை கரைக்க வேண்டும். இதை விளக்கின் முன் வைத்து பிரசாதமாக பொங்கல் வைக்க வேண்டும். பின்னர் உதிரிப்பூக்கள் துாவி அம்பிகை அல்லது மகாலட்சுமி 108 போற்றி சொல்லி வழிபட வேண்டும்.
தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புனித நதிகளை நினைத்து வழிபட வேண்டும்.
இந்த பூஜையை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இத்தீர்த்தத்தை மாவிலையால் வீடு முழுவதும் தெளிக்கலாம். மீதியிருந்தால் பூச்செடிக்கு அல்லது கால்மிதி படாத இடத்தில் ஊற்றலாம்.