செப்.26-ம் தேதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
செப்.26-ம் தேதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
ADDED : ஜூலை 16, 2024 08:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: செப்டம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 79 வது கூட்டம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30 நாட்கள் நடைபெறுகிறது.இதில் பங்கேற்று உரையாட உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பிரதமர் மோடி செப்டம்பர் 26-ம் தேதி உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.