sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து 72,162 கன அடி உபரி நீர் வெளிேயற்றம்

/

கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து 72,162 கன அடி உபரி நீர் வெளிேயற்றம்

கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து 72,162 கன அடி உபரி நீர் வெளிேயற்றம்

கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து 72,162 கன அடி உபரி நீர் வெளிேயற்றம்


ADDED : ஜூலை 22, 2024 06:32 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று மொத்தம் 72,162 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவின் கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை வேகமாக நிரம்பி வருகிறது.

இந்த அணையின் முழு கொள்ளளவான, 49.452 டி.எம்.சி.,யில் நேற்று 47.106 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2.346 டி.எம்.சி.,மட்டுமே பாக்கி உள்ளது. நேற்றிரவு வரை அணைக்கு 70,850 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 52,162 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தண்ணீர் வெளியேற்றப்படுவதை பார்க்க, ஞாயிற்று கிழமையான நேற்று பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

கபினி அணை


இதுபோன்று, மைசூரு மாவட்டம், ஹெக்கதேவன கோட்டையில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டி.எம்.சி., தற்போது 17.77 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது. அணை நிரம்ப இன்னும் 1.75 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. தற்போது அணைக்கு 39,396 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 35,917 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று மொத்தம் 72,162 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு செல்கிறது.

22_DMR_0009

கடல் போன்று காட்சி அளிக்கும் கே.ஆர்.எஸ்., அணை.






      Dinamalar
      Follow us