sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாணவர்களுக்கு பாராட்டு விழா: மைசூரு தமிழ் சங்கம் ஏற்பாடு

/

மாணவர்களுக்கு பாராட்டு விழா: மைசூரு தமிழ் சங்கம் ஏற்பாடு

மாணவர்களுக்கு பாராட்டு விழா: மைசூரு தமிழ் சங்கம் ஏற்பாடு

மாணவர்களுக்கு பாராட்டு விழா: மைசூரு தமிழ் சங்கம் ஏற்பாடு


ADDED : ஜூலை 27, 2024 10:56 PM

Google News

ADDED : ஜூலை 27, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: எஸ்.எஸ்.எல்.சி., 2ம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு, மைசூரு தமிழ் சங்கம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

மைசூரு மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., 2ம் ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, மைசூரு தமிழ் சங்கம் சார்பில், கடந்தாண்டு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இரண்டாம் ஆண்டாக, பாராட்டு விழா இன்று நடத்தப்படுகிறது. மைசூரு நகரின் விஸ்வேஸ்வரா நகர், தொழில்பேட்டை, 2வது ஸ்டேஜில் இன்று காலை 11:00 மணிக்கு விழா நடக்கிறது. விழாவில், கர்நாடக புலிகள் திட்டப்பணி வன பாதுகாவலர் ரமேஷ்குமார், பழநி புலிப்பாணி ஆசிரமத்தின் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், மைசூரு புனித பிலோமினா கல்லுாரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

மாணவ - மாணவியர் என மொத்தம் 43 பேருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மைசூரு தமிழ் சங்கம் சார்பில், சைவம் - அசைவ உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் சங்க உறுப்பினர்களும் பங்கேற்குமாறு சங்க தலைவர் பிரான்சிஸ், செயலர் ரகுபதி கேட்டு கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us