sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ.,வுக்கு திரும்ப ஈஸ்வரப்பா ஆர்வம்: எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை

/

பா.ஜ.,வுக்கு திரும்ப ஈஸ்வரப்பா ஆர்வம்: எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை

பா.ஜ.,வுக்கு திரும்ப ஈஸ்வரப்பா ஆர்வம்: எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை

பா.ஜ.,வுக்கு திரும்ப ஈஸ்வரப்பா ஆர்வம்: எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை


ADDED : ஜூன் 23, 2024 04:38 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 04:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்ப தயாராகிறார். கட்சி மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.

கடந்த 2023ன், சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வின் மூத்த தலைவர்களுக்கு, பா.ஜ., 'சீட்' கை நழுவியது. இவர்களில் ஈஸ்வரப்பாவும் ஒருவர். சீட் கிடைக்கவில்லை என்பதற்காக, லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட சிலர் கட்சிக்கு 'டாட்டா' காண்பித்து, காங்கிரசுக்கு தாவினர். ஆனால் ஈஸ்வரப்பா சமாதானமாக இருந்தார்.

சுயேச்சையாக போட்டி



லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு, அவர் சீட் எதிர்பார்த்தார். ஆனால் பசவராஜ் பொம்மைக்கு சீட் கிடைத்தது. கொதிப்படைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவை எதிர்த்து, ஈஸ்வரப்பா சுயேச்சையாக களமிறங்கினார். தொகுதியை சுற்றி வந்து பிரசாரமும் செய்தார்.

'நான் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜ.,வை எடியூரப்பா குடும்பத்தின் பிடியில் இருந்து காப்பாற்றவே, சுயேச்சையாக போட்டியிடுகிறேன். வெற்றி பெற்று எம்.பி.,யாக கட்சிக்கு திரும்புவேன்' என சவால் விடுத்தார். வேட்புமனுவை திரும்ப பெறும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டும், பொருட்படுத்தவில்லை. எனவே கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டார்.

பச்சைக்கொடி எப்போது?


தேர்தலில் ஈஸ்வரப்பாவுக்கு, டெபாசிட்டும் கிடைக்கவில்லை; இதற்காக அவர் வருத்தப்படவில்லை. பா.ஜ.,வுக்கு திரும்ப தயாராகிறார். ஆர்.எஸ்எஸ்., மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலிடத்தின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார். பச்சைக்கொடி காண்பித்ததும் சில நாட்களில் கட்சியில் சேருவார்.

ஆனால் ஈஸ்வரப்பாவை கட்சியில் சேர்க்க, எடியூரப்பா ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர். எடியூரப்பா, ராகவேந்திரா, விஜயேந்திராவை பற்றி கடுமையாக விமர்சித்த ஈஸ்வரப்பாவை, கட்சியில் சேர்க்க கூடாது என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai