/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்
/
சுல்தான்பேட்டையில் 220 எக்டரில் நுண்ணீர் பாசனம்
ADDED : ஜூலை 11, 2024 11:16 PM
சூலூர் : சுல்தான்பேட்டை வட்டாரத்தில்,220 எக்டரில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது:
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனம் திட்டத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகளுக்கு, ஒரு எக்டருக்கு, 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 855 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, 220 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.