/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரம்
ADDED : ஜூலை 22, 2024 08:38 AM
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமித்து வைக்-கப்படுகிறது. இந்த நீரில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து கொண்டு வந்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், ஊசி மீன், 80 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், உப்பிடமங்களம், கருப்பூர், மணவாசி, மாயனுார், திருக்காம்பு-லியூர், மகாதானபுரம், லாலாப்பேட்டை ஆகிய பகுதியில் இருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.