/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: டெய்லர் கைது
/
நிதி நிறுவன அதிபருக்கு மிரட்டல்: டெய்லர் கைது
ADDED : ஜூலை 23, 2024 01:32 AM
கரூர், : வேலாயுதம்பாளையம் அருகே, நிதி நிறுவன அதிபரை கத்தரி-கோலை காட்டி மிரட்டிய, டெய்லரை போலீசார் கைது செய்-தனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 41; நிதி நிறுவன அதிபர். இவர், வேலாயு-தம்பாளையம் மேலவீதியில் டெய்லர் கடை நடத்தி வரும் ராஜ-சேகரன், 21; என்பவரிடம், கடந்த சில நாட்களுக்கு முன் துணி-களை தைக்க கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் முருகேசன், தைக்கப்பட்ட துணிகளை வாங்க, டெய்லர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது, டெய்லர் ராஜசே-கரன் கட்டணமாக, 1,890 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால், கட்-டணம் அதிகமாக இருப்பதாக முருகேசன் கூறியுள்ளார். ஆத்-திரம் அடைந்த டெய்லர் ராஜசேகரன், கத்தரிகோலை காட்டி, முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, முருகேசன் அளித்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார், டெய்லர் ராஜசேகரனை கைது செய்து விசாரிக்கின்-றனர்.